ஔவையார்
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே
பொருள்: திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே.
பொருள்: நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
பொருள்: கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
பொருள்: உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
பொருள்: ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.
பொருள்: உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
பொருள்: எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
பொருள்: கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.
பொருள்: இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
பொருள்: யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
பொருள்: உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
பொருள்: நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
பொருள்: ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
பொருள்: அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
பொருள்: கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
பொருள்: ‘ங’ என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.”ங” என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
பொருள்: சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
பொருள்: கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
பொருள்: உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
பொருள்: ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
பொருள்: உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
பொருள்: ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
பொருள்: எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
பொருள்: பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
பொருள்: நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
பொருள்: பாம்புகளை பிடித்து விளையாடாதே.
பொருள்: இலவம் பஞ்சு’ எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.
பொருள்: படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.
பொருள்: இழிவான செயல்களை செய்யாதே.
பொருள்: இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்)
தவறாமல் கற்றுக்கொள்.
பொருள்: தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.
பொருள்: மிகுதியாக துங்காதே.
பொருள்: யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
பொருள்: தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
பொருள்: உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.
பொருள்: இழிவான குணஞ் செயல்களை நீக்கு.
பொருள்: நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
பொருள்: நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.
பொருள்: பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
பொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.
பொருள்: உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
பொருள்: பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
பொருள்: குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).
பொருள்: வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு.
பொருள்: அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).
பொருள்: அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
பொருள்: பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.
பொருள்: புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
பொருள்: கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.
பொருள்: ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
பொருள்: செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.
பொருள்: நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
பொருள்: பெரியோர் ‘ச்சீ’ என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.
பொருள்: பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.
பொருள்: முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
பொருள்: பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.
பொருள்: யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
பொருள்: நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.
பொருள்: பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
பொருள்: முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
பொருள்: ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.
பொருள்: கடவுளை பழிக்காதே.
பொருள்: உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.
பொருள்: மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
பொருள்: பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
பொருள்: ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
பொருள்: நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.
பொருள்: நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.
பொருள்: உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
பொருள்: வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.
பொருள்: நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.
பொருள்: அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
பொருள்: நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
பொருள்: ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.
பொருள்: பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.
பொருள்: பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
பொருள்: மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
பொருள்: பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.
பொருள்: பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
பொருள்: குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.
பொருள்: பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.
பொருள்: உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.
பொருள்: விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.
பொருள்: அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
பொருள்: அறியாமையை போக்கு.
பொருள்: அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
பொருள்: பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
பொருள்: யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.
பொருள்: எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
பொருள்: பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
பொருள்: சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
பொருள்: மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
பொருள்: எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.
பொருள்: மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
பொருள்: பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
பொருள்: நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
பொருள்: விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.
பொருள்: சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.
பொருள்: நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.
பொருள்: உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.
பொருள்: பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.
பொருள்: கல்வியாகிய நற்பொருளை விரும்பு.
பொருள்: முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.
பொருள்: உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.
பொருள்: ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
பொருள்: யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
பொருள்: வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.
பொருள்: நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.
பொருள்: பகைவர்களை நம்பாதே.
பொருள்: எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.