விவசாயத்துக்கு முன்னதாகக் கலப்பைக் கொண்டு நிலத்தைக் கிளரும் செயல் உழவு எனப்படும். ஏற்கனவே இட்ட பயிரின் வேர் பகுதி மண்ணை இறுகிக்கொண்டிருக்கும். இந்நிலையில் அடுத்த பயிரின் வித்து அதில் விதைக்க வேண்டுமாயின் அம்மண்ணைக் கிளற வேண்டும். இக்கிளரும் முறைக்கு உழவுஎன்று பெயர். இதனால் மண்ணில் போதிய வெற்றிடம் கிடைக்கும். இதன் மூலம் பிராண வாயு மண்ணினுள் எளிதில் புகும்