பெருந்தச்சன், சிற்பி, தபதி architect, master-builder, stone-mason or sculptor ராமபாண்டிய மன்னனின் எல்லைக்குட்பட்ட சிற்றரசன் வீரபாண்டியன். அவன் செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தான். அங்கிருந்த நடராஜர் சிலையின் அழகு அவனை கவர்ந்தது. அதேபோல, தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என, ஒரு ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. சிலைகளின் அழகைக் கண்டு, மன்னன் ஆனந்தம் கொண்டான். இதே போல, அழகான சிலைகள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில், ஸ்தபதியை கொன்றுவிடும்படி, காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் வைத்து, அவரது கையை மட்டும் வெட்டி விட்டனர். இதை கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான். (வாரமலர், ஜூன் 17,2012)
Stapati