பூலோகத்திலுள்ள அழகர்மலை தீர்த்தத்தில் அமர்ந்து சுதபஸ் மகரிஷி, பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், "நீ மண்டூகமாக (தவளை) போ!" என சாபமிட்டார்.(அழகர் வந்தார்; அருளை தந்தார், தினமலர் வாரமலர், 6 மே 2012)